/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கட்டட மேஸ்திரி மயங்கி விழுந்து சாவு
/
கட்டட மேஸ்திரி மயங்கி விழுந்து சாவு
ADDED : ஏப் 28, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கட்டட மேஸ்திரி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த வரக்கால்பட்டு, புது காலனியைச் சேர்ந்தவர் லோகநாதன்,52; கட்டட மேஸ்திரி. மது குடிக்கும் பழக்கம் உடையவர்.
இவர் நேற்று முன்தினம் மதியம் மதுபோதையில் உண்ணாமலை செட்டி சாவடியில் மயங்கி விழுந்து கிடந்தார்.
அவரை கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது, பரிசோதித்த டாக்டர், லோகநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.