ADDED : அக் 15, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பெண் கட்டட தொழிலாளி தவறி கீழே விழுந்து இறந்தார்.
புவனகிரி ஆதிவராகநத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன், 60; இவரது, மனைவி சரோஜினி, 40; கட்டட தொழிலாளி. இவர் நேற்று பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் ரத்தினம் நகரை சேர்ந்த சித்ரா என்பவரின் வீட்டில் கட்டம் கட்டம் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, சரோஜினி, மாடிப்படியில் இருந்து இறங்கி செல்லும்போது கீழே தவறி கீழே விழுந்தார். பலத்த படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்தவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.