ADDED : மார் 15, 2026 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: பைக் மீது பஸ் மோதிய விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.
சிதம்பரம் அடுத்துள்ள கோவிலாம்பூண்டி காரப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சேகர், 45; கொத்தனார்; திருமணம் ஆகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.
நேற்று மாலை சேகர் தனது பைக்கில், சிதம்பரம்- சீர்காழி புறவழிச்சாலையில் , லால்புரத்தை சாலையில் கடக்க முயன்றார்.
அப்போது காரைக்காலில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக சேகர் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்ட சேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலின் பேரில் , தாலுகா போலீசார் விரைந்து சென்று, சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சிதம்பரம், அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

