
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் நலச்சங்கத்தின், பெரம்பலுார் தொகுதி ஆலோசனைக்கூட்டம் பெரம்பலுாரில் நடந்தது.
மாவட்ட அமைப்பாளர் ரகு தலைமை தாங்கினார். கிருஷ்ணன் வரவேற்றார். சங்கத்தின் கவுரவ தலைவர் பொன் குமார் நிர்வாகிகளை தேர்வு செய்து பேசினார்.
ரியல் எஸ்டேட் சங்கத்தின் மாநில தலைவர் மருதை, மாநில செயலாளர் குமார், மாநில பொருளாளர் ஜெயராமன், மாநில துணைத்தலைவர் ரஜினிராஜ், மாநில இணை செயலாளர் நாகராஜ், மாநில அமைப்பு செயலாளர் சுரேஷ்குமார், கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாநில இணை செயலாளர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட தலைவராக ரகு, மாவட்ட செயலாளராக கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பெரம்பலுார் மற்றும் குன்னம் தொகுதி வாரியாகவும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.