/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்பு அரவை துவங்க விவசாயிகளுடன் ஆலோசனை
/
கரும்பு அரவை துவங்க விவசாயிகளுடன் ஆலோசனை
ADDED : ஜன 02, 2025 11:07 PM

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவங்குவதற்காக விவசாயிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஆலையின் மேலாண் இயக்குனர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஆலை தலைமை பொறியாளர் மணிமாறன், துணை தலைமை பொறியாளர் ரவிக்குமார், ரசாயன தலைமை பொறியாளர் செல்வேந்திரன், தொழிலாளர் நலஅலுவலர் சக்கரபாணி, கணக்கு அலுவலர் ரமேஷ்பாபு, அலுவலக மேலாளர் ஜெய்சங்கர், தி.மு.க.. ஒன்றிய செயலாளர் முத்துசாமி, வளையமாதேவி செல்வராசு முன்னிலை வகித்தனர்.
தலைமை கரும்பு அலுவலர் ரவிக்கிருஷ்ணன் வரவேற்றார்.
கூட்டத்தில், பங்கேற்ற விவசாயிகள் கரும்பு உற்பத்தியை பெருக்க ஆலை நிர்வாகம் விதை கரனை, கரும்பு வெட்டு கூலியை வழங்க வேண்டும், கரும்பு பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்க ஆட்கள் பற்றாக்குறையால் கரும்பு வெட்டிற்கு ஆட்களை அமர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
தொடர்ந்து ஆலை அதிகாரிகள் பேசுகையில், கரும்பு பயிரிடும் விவசாயிகள் கோரிக்களை சர்க்கரைத்துறை ஆணையத்திடம் தெரிவிப்பதாக கூறினர். மேலும், நடப்பு 2024-2025 ஆண்டு கரும்பு அரவைக்கான ஆயத்த பணிகள் நடந்து வருவதால் விரைவில் அரவை துவங்கும் என தெரிவித்தனர்.
கரும்பு அலுவலர்கள் ராஜதுரை, ராஜேந்திரன், விவசாயிகள் இளவரசன், சுந்தரமூர்த்தி, சரண்ராஜ், அண்ணதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

