sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொடர் மழை எதிரொலி நெல் அறுவடை பாதிப்பு

/

தொடர் மழை எதிரொலி நெல் அறுவடை பாதிப்பு

தொடர் மழை எதிரொலி நெல் அறுவடை பாதிப்பு

தொடர் மழை எதிரொலி நெல் அறுவடை பாதிப்பு


ADDED : செப் 21, 2025 11:27 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்,: புதுச்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் மழையால் குறுவை பட்ட நெல் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது.

குறுவை பருவம் ஜூன் - ஜூலை மாதங்களில் துவங்கி செப்.,- அக்., மாதங்களில் முடிவடையும்.

புதுச்சத்திரம் மற்றும் ஆலப்பாக்கம், மேட்டுப்பாளையம், தானுார், சம்பாரெட்டிப்பாளையம், தீர்த்தனகிரி, சிறுபாலையூர், பெரியப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பெருமாள் ஏரி பாசனம் மூலமாகவும், மணிக்கொல்லை, அலமேலுமங்காபுரம், பூவாலை, அத்தியாநல்லுார், வேளங்கிப்பட்டு உள்ளிட்ட பகுதி விவசாயிகள் போர்வெல் மற்றும் வாய்க்கால் நீர் மூலம், குறுவை பட்டத்திற்கு ஆண்டுதோறும், நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தாண்டு இப்பகுதிகளில் 1,000 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் அறுவடை செய்யும் பணி, துவங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக, இப்பகுதியில் மழை பெய்வதால் வயல்களில் தண்ணீர் தேங்கி, அறுவடை செய்ய முடியாமல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us