ADDED : பிப் 03, 2026 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டியில் சி.ஐ.டி.யு., ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ந டந்தது.
வட்டார பொறுப்பாளர் திருமுருகன் தலைமை தாங்கினார். வட்ட ஒருங்கிணைப்பு குழு கன்வீனராக உத்திராபதி தேர்வு செய்யப்பட்டார்.
வரும் 12ம் தேதி நடைபெற உள்ள இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சுமைப்பணி சங்கம் நாகராஜ், கட்டுமான சங்கம் தட்சணாமூர்த்தி, நடராஜன், சங்கர், சிவா, ராஜேந்திரன், குமார், அண்ணாதுரை, கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

