/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை நகராட்சி கூட்டம் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
/
விருதை நகராட்சி கூட்டம் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
ADDED : ஆக 01, 2025 02:43 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி கூட்டம் நடந்தது.
நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். துணை சேர்மன் ராணி தண்டபாணி, நகராட்சி கமிஷனர் பானுமதி முன்னிலை வகித்தனர்.
நகரமைப்பு அலுவலர் செல்வம் வரவேற்றார். இந்த கூட்டத்தில் 33 வார்டுகளை சேர்ந்த தி.மு.க.,-அ.திமு.க., பா.ம.க.,-தே.மு.தி.க., சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் குடிநீர், சாலை, வடிகால் வாய்க்கால், ரேஷன் கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோரிக்கை வைத்தனர். அனைத்தும் பரீசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் சங்கவி முருகதாஸ் உறுதியளித்தார். துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.