/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலெக்டர் ஆபீசில் தம்பதி தற்கொலை முயற்சி
/
கலெக்டர் ஆபீசில் தம்பதி தற்கொலை முயற்சி
ADDED : டிச 23, 2024 11:18 PM
கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.
காடாம்புலியூர் அடுத்த சின்னபுறங்கணி கிராமத்தை சேர்ந்தவர் பிரித்திவிராஜ், 34; மாற்றுத்திறனாளியான இவர் தனது மனைவி பிரியங்கா, 22; என்பவருடன், கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அங்கு, அலுவலக நுழைவாயில் முன் தான் மறைத்து வைத்திருந்த டீசலை தங்கள் மீது ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைக்கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், பிரித்திவிராஜ் மாற்றுத்திறனாளி என்பதால், அரசு வேலை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு முறை மனு அளித்துள்ளார்.
ஆனால், மனு மீது நடவடிக்கை இல்லை. இதனால், தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீசார் இருவரையும் கடலுார் புதுநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி, வழக்கு பதிந்துள்ளனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.