நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: கனமழை காரணமாக பசு மாடு பரிதாபமாக இறந்தது.
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பூவாலையை சேர்ந்தவர், பாவாடைராயன் மனைவி சத்யா 45; இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து, பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பெய்த தொடர் மழையின் காரணமாக, அவரது பசு மாடு இறந்தது.
தகவலறிந்த கால்நடைத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆய்வு செய்தனர்.

