UPDATED : ஆக 11, 2026 11:35 PM
ADDED : ஆக 11, 2026 09:53 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: வயலில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு, மின்னல் தாக்கி இறந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த கீழ் அருங்குணத்தை சேர்ந்தவர் விஜயராஜ். இவர் நேற்று மாலை தனது பசு மாட்டை அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்று மற்றும் இடி,மின்னலுடன் மழை பெய்தது.
அப்போது வயலில் மேய்ந்து கொண்டிருந்த விஜயராஜின் மாட்டின் மீது மின்னல் தாக்கியதில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது.
