sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விழுப்புரம் - -நாகை 4 வழிச்சாலையில் கடலுார் அருகே மீண்டும் விரிசல்

/

விழுப்புரம் - -நாகை 4 வழிச்சாலையில் கடலுார் அருகே மீண்டும் விரிசல்

விழுப்புரம் - -நாகை 4 வழிச்சாலையில் கடலுார் அருகே மீண்டும் விரிசல்

விழுப்புரம் - -நாகை 4 வழிச்சாலையில் கடலுார் அருகே மீண்டும் விரிசல்

1


ADDED : ஏப் 17, 2025 06:44 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 06:44 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், கடலுார் அருகே பாலத்தில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ., துாரத்துக்கு நான்கு வழி சாலை பணி, 6,431 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இச்சாலை முழுவதும் சிமென்ட் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.

பணிகள் 4 கட்டங்களாக நடந்து நிலையில், முதற்கட்டமான, விழுப்புரம் ஜானகிபுரத்திலிருந்து புதுச்சேரி மாநிலம், எம்.என்.குப்பம் வரை (0-29 கி.மீ.,) மூன்றாம் கட்டமான 57 கி.மீ., துாரத்திற்கு பூண்டியாங்குப்பம் முதல் மயிலாடுதுறை மாவட்டம் சட்டநாதபுரம் வரை பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இரண்டாம் கட்டமான 38 கி.மீ., துாரமான, புதுச்சேரி எம்.என்.குப்பம் முதல் கடலுார் பூண்டியாங்குப்பம் வரை பணிகள் முடிந்து மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தாலும், சிறு பணிகள் நிலுவையில் உள்ளதால் இரண்டாம் கட்ட சாலையை தற்காலிகமாக மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க முடியவில்லை.

முதல் கட்டமான 29 கி.மீ., துாரத்திற்கு கெங்கராம்பாளையத்திலும், மூன்றாம் கட்டமான 57 கி.மீ., துாரத்திற்கு கொத்தட்டையிலும் சுங்கச் சாவடிகள் திறக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் முதல் மற்றும் மூன்றாம் கட்ட துாரமான 123.8 கி.மீ., துாரம் வரை மக்கள் சங்கடமின்றி எளிதாகவும், விரைவாகவும் பயணிக்க முடியும் என்பதால் பொதுமக்கள், வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கடலுார்-விருத்தாசலம் ரோடு, அன்னவல்லியில் ரயில்வே மேம்பால பணி முடிந்து சாலை இணைப்பு பணி நடக்கிறது.

இப்பகுதியில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பணி முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் கடலுார் அடுத்த அன்னவல்லி கிராமம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டு, விரிசல் ஏற்பட்ட இடத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கடலுார் முதுநகர் மற்றும் கூத்தப்பாக்கம் அருகே நான்குவழிச்சாலையில் விரிசல் ஏற்பட்டு அதை முற்றிலுமாக அகற்றி சரிசெய்தனர். கடலுார் அருகே அமைக்கப்படும் இரண்டாம் கட்ட பணிகளில் அவ்வப்போது சாலையில் விரிசல் ஏற்படுவது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விரிசல் ஏற்படும் பகுதிகளை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து, நிரந்தர தீர்வு காணவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us