கிரிக்கெட் இறுதி போட்டி சில்வர் பீச்சில் ஒளிபரப்பு
கிரிக்கெட் இறுதி போட்டி சில்வர் பீச்சில் ஒளிபரப்பு
ADDED : மார் 09, 2026 04:39 AM

அ நிறம் | அளவு
கடலுார்: டி-20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அகமதாபாத் மைதானத்தில் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதனையொட்டி கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக இப்போட்டி தேவனாம்பட்டினம் கடற்கரையில் எல்.இ.டி., திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் போட்டியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
