ADDED : மார் 02, 2025 02:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர்: கடலூர் கிளை சிறைச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது .
கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் கடந்த 1983ம் ஆண்டு முதல் கிளைச் சிறைச்சாலை உள்ளது. 143 பேர் தங்கும் அளவில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இடம் நெருக்கடி காரணமாக75 பேர் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்டனர். இங்கு காவலர்கள் ஊழியர்கள் உட்பட 18 பேர் பணிபுரிந்தனர்.
கடந்த மாதம் நடந்த சிறைத்துறை அதிகாரிகள் மாதாந்திர கூட்டத்தில், கைதிகள் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடலூர் கிளைச் சிறைச்சாலை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிளைச் சிறைச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் அங்கு அடைக்கப்பட்டிருந்த 16 விசாரணை கைதிகள் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.