/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கழிவுநீர் தேங்கும் இடமாக மாறிய கடலுார் பஸ் ஸ்டாண்ட்
/
கழிவுநீர் தேங்கும் இடமாக மாறிய கடலுார் பஸ் ஸ்டாண்ட்
கழிவுநீர் தேங்கும் இடமாக மாறிய கடலுார் பஸ் ஸ்டாண்ட்
கழிவுநீர் தேங்கும் இடமாக மாறிய கடலுார் பஸ் ஸ்டாண்ட்
ADDED : பிப் 08, 2026 03:33 AM

கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் தினசரி பஸ் இயக்கப்படுகிறது.
இதனால், பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
லாரன்ஸ்ரோடு வழியாக பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலை வளைவில் உள்ள (நாகம்மன் கோவில் எதிரில்) கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது, முறையாக அகற்றுவது கிடையாது. அப்படியே அகற்றினாலும் பெயரளவில் மட்டுமே குப்பையை அகற்றிவிட்டு கடமை முடிந்து விட்டது என செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக கழிவுநீர் வழிந்தோடி சாலையில் தேங்கி நிற்பது தொடர் கதையாக உள்ளது. இதனால் அப்பகுதயில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. இதையொட்டி, சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
அதிகாரிகள் பலர் இவ்வழியாக சென்றும் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதில் நடவடிக்கை எடுக்கவில்லை. பஸ் உள்ளே செல்லும் போது, கழிவுநீர் பொதுமக்கள் மீது தெளிக்கிறது.
நாகம்மன் கோவில் கும்பாபிஷேக. வரும் 11ம் தேதி நடக்கும் நிலையில், கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

