sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும் : திட்டக்குடியில் அழகிரி எம்.பி., பேச்சு

/

மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும் : திட்டக்குடியில் அழகிரி எம்.பி., பேச்சு

மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும் : திட்டக்குடியில் அழகிரி எம்.பி., பேச்சு

மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும் : திட்டக்குடியில் அழகிரி எம்.பி., பேச்சு


ADDED : ஆக 29, 2011 10:09 PM

Google News

ADDED : ஆக 29, 2011 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : ''மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும்'' என கடலூர் எம்.பி., அழகிரி பேசினார்.

திட்டக்குடியில் காங்., கட்சி சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பிறந்தநாள் விழா மற்றும் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலர் இளவழகன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சரவணன், முன்னாள் மாவட்டத் தலைவர் கண்ணன், நல்லூர் வட்டார தலைவர் கந்தசாமி, மாவட்டச் செயலர் செல்வமணி கந்தசாமி, சோனியா பேரவைத் தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் கனகசபை வரவேற்றார். கூட்டத்தில் அழகிரி எம்.பி., பேசியதாவது: மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருந்தால் மட்டுமே தமிழகம் தன்னிறைவு அடையும். அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பொருளாதார சீரழிவில் சிக்கித் தவிக்கும் போது இந்திய பொருளாதாரம் பாதிப்பின்றி இருப்பதற்குக் காரணம் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் வழிகாட்டுதல்தான். அன்னா ஹசாரே காந்திய வழியில் போராடுவதை ஆதரிக்கும் நாங்கள் இந்திய ஜனநாயகத்தை குளறுபடி செய்யும் வேலைகளுக்கு இடமளிக்க மாட்டோம். இந்திய சட்டத்தின்படி எதிர்க்கட்சி தலைவர் தலைமையாகக் கொண்ட பொதுக் கணக்குக் குழுவும், நாடாளுமன்ற குழுவும் பிரதமரை விசாரிக்க வழி உள்ளது. இவ்வாறு அழகிரி எம்.பி., பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, இளைஞர் காங்., நகர தலைவர் ராஜ்குமார், பாலமுருகன், சேவாதளம் முருகன், குமார் மாணவரணி ராம்பிரபு உட்பட பலர் பங்கேற்றனர். இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சவுந்திர ராஜன் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us