sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் உழவர் சந்தையில் ரூ. 35 லட்சம் வர்த்தகம்

/

கடலுார் உழவர் சந்தையில் ரூ. 35 லட்சம் வர்த்தகம்

கடலுார் உழவர் சந்தையில் ரூ. 35 லட்சம் வர்த்தகம்

கடலுார் உழவர் சந்தையில் ரூ. 35 லட்சம் வர்த்தகம்


ADDED : ஜன 16, 2025 05:19 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுார் உழவர் சந்தையி்ல் 50 டன் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை செய்யப்பட்டது.

கடலுார் உழவர் சந்தையில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு, கடலுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்கின்றனர். தினமும் 1,500 முதல், 2,000 பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை வாங்கிச் செல்கின்றனர். தினமும் 20 டன் காய்கறிகள், 5 டன் பழங்கள் விற்பனையாகிறது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையொட்டி பழங்கள், காய்கறிகள், கரும்பு, மஞ்சள் கொத்து பயன்பாட்டிற்கான தேவை அதிகரித்தது. இதன் காரணமாக வழக்கத்தை விட உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்கள் அதிகளவில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 2 நாட்களில் 30 டன் கரும்புகள், 20 டன் மஞ்சள் கொத்து, 65 டன் காய்கறிகள், 15 டன் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது.

விற்பனை தொகை 35 லட்சம் ரூபாய் ஆகும். பொதுமக்கள் 8,000த்திற்கும் மேற்பட்டோர் வந்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us