/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவையில் அசத்திய கடலுார் கால்பந்து வீரர்கள்
/
கோவையில் அசத்திய கடலுார் கால்பந்து வீரர்கள்
ADDED : ஏப் 02, 2025 10:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு; கோயம்புத்துாரில், நீலகிரி கால்பந்து கழகம் சார்பில், 45 வயதிற்கு மேற்பட்ட மூத்த கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கான நட்பு ரீதியான கால்பந்து போட்டிகளை நடத்தியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொண்டது.
இதில், கடலுார் வெட்ரன்ஸ் கால்பந்து கழகத்தின் சார்பில், மூத்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்று, சிறப்பாக விளையாடி அசத்தி, பரிசு பெற்றனர்.
பங்கேற்ற விளையாட்டு வீரர்களை, மூத்த கால்பந்து விளையாட்டு வீரர் பாப்புலர் பிளாஸ்டிக் நிறுவனர் பாஸ்கர், வீரர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

