sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லிப்டில் சிக்கிய கடலுார் எம்.பி., உடன் சென்ற இருவர் மயக்கம்

/

லிப்டில் சிக்கிய கடலுார் எம்.பி., உடன் சென்ற இருவர் மயக்கம்

லிப்டில் சிக்கிய கடலுார் எம்.பி., உடன் சென்ற இருவர் மயக்கம்

லிப்டில் சிக்கிய கடலுார் எம்.பி., உடன் சென்ற இருவர் மயக்கம்


ADDED : பிப் 17, 2025 01:03 AM

Google News

ADDED : பிப் 17, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: விடுதி லிப்ட் பழுதாகியதால், கடலுார் காங்., -- எம்.பி., உள்ளிட்ட 6 பேர் உள்ளுக்குள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலுார் மாவட்டம், வடலுார் தனியார் விடுதி மூன்றாவது மாடியில், காங்., கட்சி மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத் பங்கேற்றார்.

மதியம், 1:00 மணியளவில், விடுதி மூன்றாம் தளத்திற்கு செல்ல, விஷ்ணுபிரசாத், கடலுார் மாவட்ட தலைவர் திலகர் உள்ளிட்ட கட்சியினர் ஆறு பேர் லிப்டில் ஏறினர். லிப்ட் பாதியில் பழுதாகி நின்றது.

வடலுார் போலீசார், குறிஞ்சிப்பாடி தீயணைப்பு வீரர்கள் கடப்பாரையால் லிப்ட் கதவை உடைத்து, எம்.பி., உள்ளிட்ட ஆறு பேரை மீட்டனர். அப்போது, முன்னாள் இளைஞர் காங்., தலைவர் ஷாக்கோ, வடலுார் நகர தலைவர் பலராமன் மயக்கமடைந்தனர்.

அங்கு வந்த வடலுார் அரசு மருத்துவமனை டாக்டர்கள் இருவருக்கும் முதலுதவி அளித்தனர். ஐந்து பேர் செல்ல வேண்டிய லிப்டில் ஆறு பேர் ஏறியதால் பழுதானதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us