sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சத்துணவு ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு துவக்கம்

/

சத்துணவு ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு துவக்கம்

சத்துணவு ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு துவக்கம்

சத்துணவு ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு துவக்கம்


ADDED : ஆக 05, 2011 03:13 AM

Google News

ADDED : ஆக 05, 2011 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் ஒன்றிய சத்துணவு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பம் பெறும் பணி துவங்கியது.தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை ஏற்று வருங்கால வைப்பு நிதி வழங்க உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு துவங்குவதற்காக ஆயத்த பணிகள் துவங்கப்பட்டது. இதற்கான ஆய்வு கூட்டம் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் நடந்தது. சத்துணவு மேலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சத்துணவு அமைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோர் சத்துணவு ஊழியர்களை ஒருங்கிணைத்து விண்ணப்பங்கள் பெற்றனர்.ஒன்றியத்துக்குட்பட்ட 55 பஞ்சாயத்துகளில் உள்ள 123 பள்ளிகளில் இருந்து சத்துணவு பணியாளர்கள் 330 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் பொறுப்பாளர்கள், சமையலர், உதவியாளர் என அனைவரிடமும் விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us