sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வனத்துறை தேக்கு மரங்கள்ரூ.34 லட்சத்திற்கு ஏலம்

/

வனத்துறை தேக்கு மரங்கள்ரூ.34 லட்சத்திற்கு ஏலம்

வனத்துறை தேக்கு மரங்கள்ரூ.34 லட்சத்திற்கு ஏலம்

வனத்துறை தேக்கு மரங்கள்ரூ.34 லட்சத்திற்கு ஏலம்


ADDED : ஆக 11, 2011 04:09 AM

Google News

ADDED : ஆக 11, 2011 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி:புவனகிரியில் வனத்துறைக்குச் சொந்தமான தேக்கு மரங்கள், 34 லட்சத்து, 7 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.கடலூர் மாவட்டத்தில் கீரப்பாளையம், லால்பேட்டை ஆகிய இரு இடங்களில், மத்திய தேக்கு மர சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு சேமிக்கப்படும் தேக்கு மரங்கள் ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு, மாதம் ஒரு முறை ஏலம் விடப்படுகிறது.கீரப்பாளையம் சேமிப்பு கிடங்கில், 75 ரகங்களுக்கு நேற்று ஏலம் விடப்பட்டது.சென்னை தலைமை வன பாதுகாப்பு அலுவலர் ஆனந்த நாயக் தலைமையில் ஏலம் நடந்தது. விழுப்புரம் மண்டல வனச்சரக அலுவலர் யோகேஷ், மாவட்ட வன அலுவலர் சுப்ரமணியன் பங்கேற்றனர்.

ஏலத்தில் கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், நாகர்கோவில் மாவட்ட பகுதிகளிலிருந்து, 30 பேர் பங்கேற்றனர். 75 ரகங்களில், 51 ரகங்கள் மட்டும், 34 லட்சத்து, 7,ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. மீதமுள்ள, 24 ரகங்களுக்கு ஏலம் கேட்க யாரும் முன்வராததால் ஏலம் விடவில்லை.






      Dinamalar
      Follow us