/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய போட்டியில் கடலுார் வீரர்கள் சாதனை; டென்னிஸ் பயிற்சியாளர் அப்பாதுரை பெருமிதம்
/
தேசிய போட்டியில் கடலுார் வீரர்கள் சாதனை; டென்னிஸ் பயிற்சியாளர் அப்பாதுரை பெருமிதம்
தேசிய போட்டியில் கடலுார் வீரர்கள் சாதனை; டென்னிஸ் பயிற்சியாளர் அப்பாதுரை பெருமிதம்
தேசிய போட்டியில் கடலுார் வீரர்கள் சாதனை; டென்னிஸ் பயிற்சியாளர் அப்பாதுரை பெருமிதம்
ADDED : நவ 20, 2025 05:51 AM

கடலுார்: கடலுார் மாவட்ட வீரர்களை சர்வதேச அளவிலான டென்னிஸ் போட்டியில் பங்கேற்க செய்து சாதனை படைக்க வேண்டும் என்பதே லட்சியம் என, பயிற்சியாளர் அப்பாதுரை கூறினார்.
கடலுார் அடுத்த கீழ் குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் அப்பாதுரை. சிறு வயது முதலே, டென்னிஸ் விளையாட்டின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
இதன் விளைவாக பள்ளிப்படிப்பின் போது, டென்னிஸ் போட்டியில் பயிற்சி பெற்றார். தேசிய அளவில் நடந்த போட்டியில் வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் பெற்றார்.
இவர், பல மாணவ, மாணவிகளை தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்க செய்து, வெற்றி பெற வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியாவது:
கடந்த 2008ம் ஆண்டு பெங்களூரு நேதாஜி சுபாஷ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட் மையத்தில் டென்னிஸ் படிப்பு பயின்றேன்.
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர், டென்னிஸ் பயிற்சியாளராக பணிபுரிந்தேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் 2011ம் ஆண்டு முதல் டென்னிஸ் பயிற்சியாளராக உள்ளேன்.
என்னிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் கடந்த, 2012 முதல், 2014 வரை அபர்ணா, பாரதி, சதீஷ், பரத், பாலாஜி, அசோக்குமார், ராஷ்மி, திவ்யா ஆகியோர் மாநில அளவிலான போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் பெற்றனர். அதேபோல கடந்த, 2015 முதல், 2020 வரை நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் மிருதுளா, அனீஸ் ஆகியோர் தங்கம், வெள்ளி பதக்கம் பெற்றனர்.
மேலும், நன்மாறன் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார். கடந்த, 2017ல் நடந்த தேசிய அளவிலான போட்டியில் இரட்டையர் பிரிவில் என்னிடம் பயிற்சி பெற்ற, அபர்ணா, ஜெயப்பிரியா ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர்.
கடந்த, 2022 முதல், 2024 வரை தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த சாப்ட் டென்னிஸ் போட்டியில் என்னிடம் பயிற்சி பெற்ற, தமிழ்விழி, 3 முறை வெண்கலம் பதக்கம் பெற்றார்.
மேலும், இவர், வேலுாரில் நடந்த தேசிய சப் ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் குழு போட்டியில் முதலிடம், மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் முதலிடம், ஒற்றையர் பிரிவு போட்டியில் இரண்டாமிடம் பிடித்து 2 தங்கம், 1 வெள்ளி பெற்று கடலுாருக்கு பெருமை சேர்த்தார்.
கடந்த, 2024ல் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் பிரிவு குழு போட்டியில் தங்கம், மகளிர் இரட்டை பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றார். இவர் கடந்த, 2024ல் சீனாவில் நடந்த, 4வது சர்வதேச அளவிலான போட்டியில் காலிறுதி வரை விளையாடினார்.
இதனையொட்டி மாணவி தமிழ்விழிக்கு, துணை முதல்வர் உதயநிதி, 9.37 லட்சம் ரூபாய், உயரிய ஊக்கத் தொகை வழங்கினார்.
தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான சாப்ட் டென்னிஸ் போட்டியில் மாணவி ஏவலின் லுாஸ் 19 வயதுக்குட்பட்ட குழு போட்டியில், 2 ம் இடம், 17 வயதிற்குட்பட்ட போட்டியில் தமிழ் விழி ஒற்றையர் போட்டியில், 3ம் இடம் பிடித்தனர்.
கடலுார் மஞ்சக்குப்பம் வரதம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி சத்யபிரியா தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார்.
தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்கத்தின் உறுதுணையோடு கடலுார் மாவட்ட வீரர்களை இன்டர்நேஷனல் போட்டியில் பங்கேற்க செய்து சாதனை படைக்க வேண்டும் என்பதே லட்சியம். இதற்காக அவர்களுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

