/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் சிறை கைதி மருத்துவமனையில் உயிரிழப்பு
/
கடலுார் சிறை கைதி மருத்துவமனையில் உயிரிழப்பு
ADDED : ஜன 12, 2025 05:01 AM

கடலுார் : கடலுார் மத்திய சிறைக் கைதி, உடல் நலமின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த முரார்பாளையம், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஷாஜஹான் மகன் முகமது அப்தாலி,19.
இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் முதல் கடலுார் கேப்பர்மலையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 9ம் தேதி அவருக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. அன்று மாலை கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு நேற்று அதிகாலை 1:30 மணியளவில் உயிரிழந்தார். கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.