sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகள் அளவில் கடலுார் 5வது இடம்: கலெக்டர் தகவல்  

/

பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகள் அளவில் கடலுார் 5வது இடம்: கலெக்டர் தகவல்  

பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகள் அளவில் கடலுார் 5வது இடம்: கலெக்டர் தகவல்  

பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகள் அளவில் கடலுார் 5வது இடம்: கலெக்டர் தகவல்  


ADDED : மே 09, 2025 03:34 AM

Google News

ADDED : மே 09, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகள் அளவில் கடலுார் மாவட்டம் 5ம் இடம் பிடித்துள்ளது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறினார்.

இதுகுறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

2024-25ம் ஆண்டிற்கான பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் கடலுார் மாவட்டம் 96.06 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தேர்ச்சியில் 10வது இடம், அரசுப் பள்ளிகள் அளவில் 5வது இடமும் பிடித்துள்ளது.

பல ஆண்டுகளை காட்டிலும் இந்தாண்டு கடலுார் மாவட்டம் தேர்ச்சி சதவீதம் முன்னேறியள்ளது. கடந்தாண்டை பொருத்தவரை கடலுார் மாவட்டம் மாநில அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தேர்ச்சியில் 22வது இடம், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சியில் 23வது இடத்தையும் பிடித்தது.

நடப்பாண்டில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டது. குறிப்பாக, கடந்தாண்டு தேர்ச்சியுடன் ஒப்பிட்டு, ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடையும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தியதன் மூலம் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முடிந்தது.

'தடைகளை தாண்டி தேர்ச்சி' என்ற சிறப்பு முயற்சி எடுக்கப்பட்டது. இதன் மூலம் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு சரிவர வர இயலாத மாணவர்களை கண்டறிந்து அவர்கள் கல்வியை தொடர வகை செய்யும் வகையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டது.

இக்குழு மூலம் மாணாக்கர்கள் பள்ளிக்கு வருகை புரிவதை உறுதி செய்யப்பட்டதுடன் சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சி பெற வழிவகை செய்யப்பட்டது. இதுபோன்ற சீரிய முயற்சிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை மூலம் எடுக்கப்பட்டதன் விளைவாக தற்போது அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் ஆங்கிலம் பேச்சு பயிற்சி, புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கலை பயிற்சி, பிரெஞ்சு மொழி பயிற்சி, அடுமனை பயிற்சி, மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி பயிற்சி, சதுரங்க விளையாட்டு பயிற்சி, இணையதள வடிவமைப்பு பயிற்சி, கணினி நிரலாக்க அடிப்படைப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, குதிரை ஏற்ற பயிற்சி, வில்வித்தை பயிற்சி, கலை மற்றும் ஓவிய பயிற்சி, நீச்சல் ஆகிய சிறப்பு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அரசுப் பள்ளியின் சேர்க்கை விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

டி.ஆர்.ஓ., ராஜசேகரன், முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us