/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் வாசகர் வட்ட முப்பெரும் விழா
/
கடலுார் வாசகர் வட்ட முப்பெரும் விழா
ADDED : ஏப் 14, 2025 11:47 PM

கடலுார், ; கடலுார் அரசு தலைமை மருத்துவமனை வளாக, கிளை நுாலகம் வாசகர் வட்டம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திறப்பு, முத்துகுமரன் எழுதிய நுால் வெளியீட்டு விழா, புதிய புரவலர்கள் அறிமுக விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
வாசகர் வட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் கலைச்செல்வி வரவேற்றார். ஆலோசகர் கேசவன், அம்பேத்கர் உருவப்படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார்.
ஓவிய ஆசிரியர் முத்துகுமரன் எழுதி நுாலை ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகன் வெளியிட, ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல்., உதவி பொது மேலாளர் இளங்கோவன் பெற்றுக்கொண்டார். இதில், புதிய புரவலர்களை அறிமுகப்படுத்தினர். ஓய்வுபெற்ற உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி, தமிழ் ஆசிரியர் சுப்ரமணியன், ஓய்வுபெற்ற அலுவலக கண்காணிப்பாளர் சம்பத் வாழ்த்துரை வழங்கினர்.
அப்போது, துணைத் தலைவர் சத்தியராஜ் மோகன், குமார், இணை செயலாளர் ராமஜெகதீசன், செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.