/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகை விற்பனையில் முத்திரை பதிக்கும் கடலுார் சுபஸ்ரீ வள்ளி விலாஸ்
/
நகை விற்பனையில் முத்திரை பதிக்கும் கடலுார் சுபஸ்ரீ வள்ளி விலாஸ்
நகை விற்பனையில் முத்திரை பதிக்கும் கடலுார் சுபஸ்ரீ வள்ளி விலாஸ்
நகை விற்பனையில் முத்திரை பதிக்கும் கடலுார் சுபஸ்ரீ வள்ளி விலாஸ்
ADDED : அக் 01, 2025 01:29 AM

தங்க நகைகள் என்றாலே பெண்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பது கடலுார் லாரன்ஸ் ரோடு, சுபஸ்ரீ வள்ளிவிலாஸ் ஜூவல்லரி. ஹால்மார்க் தங்க நகைகளை முத்திரையுடன் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப வழங்கும் ஒரே கடை சுபஸ்ரீ வள்ளிவிலாஸ்.
தரம் என்றும் நிரந்தரம் என்பதால் புதுச்சேரி, நெய்வேலி, விழுப்புரம், திண்டிவனம், சிதம்பரம், விருத்தாசலம் என பல்வேறு மாவட்ட மக்கள் நகைகளை வாங்கி செல்கின்றனர். வாடிக்கையாளர்கள் விரும்பும் நகைகளை கச்சிதமாக வடிவமைத்து தருகின்றனர். காதணிகள், வளையல்கள், செயின்கள், மோதிரம், நெக்லஸ், கல் பதித்த அட்டிகைகள், நவீன டிசைன்களில் அழகான நகைகள் உள்ளது. நவீன தொழில்நட்பத்தின் அடிப்படையில் 6 இலக்க எண்ணுடன் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
சுபஸ்ரீ வள்ளிவிலாஸ் ஜூவல்லரி கடை உரிமையாளர்கள் கணேசன், ரவிசங்கர், தீபக் ஆகியோர் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று, கடையை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இங்கு, தங்கம், வைடூரியம், நவரத்தின நகைகள், திருமணத்திற்கு எண்ணற்ற ரகங்கள், நட்சத்திரங்கள் போல் ஜொலிக்கின்றன.
கொலுசுகள், மெட்டிகள், வெள்ளி பாத்திரங்கள், ஒட்டியாணங்கள், முத்து, பவள நகைகள், கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, கோவை, கேரளா, நெல்லுார் போன்ற இடங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
இது பாரம்பரிய நகைக்கடை என்பது மட்டுமன்றி கைராசியான ஸ்தாபனம் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும். குளிர்சாதன வசதியுடன் கூடிய நகைகளை தேர்வு செய்ய விசாலமான இடவசதி உள்ளது. தங்க நகை சேமிப்பு திட்டங்களில் பணம் செலுத்தும் திட்டமும், செலுத்தும் பணத்திற்கு ஈடாக அன்றைய விலைக்கு தங்கமாகவும் சேமிக்கும் திட்டம் என பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் பணம் செலுத்தலாம். ஆயுத பூஜை மற்றும் தீபாவளி முன்னிட்டு புதுப்புது டிசைன்களில் குறைந்த சேதாரத்தில் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.