sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு; கடலுாரில் மத்திய குழு ஆய்வு

/

பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு; கடலுாரில் மத்திய குழு ஆய்வு

பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு; கடலுாரில் மத்திய குழு ஆய்வு

பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு; கடலுாரில் மத்திய குழு ஆய்வு


ADDED : டிச 08, 2024 11:48 PM

Google News

ADDED : டிச 08, 2024 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : பெஞ்சல் புயல் கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, கடலுார் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள 150 கிராமங்கள் பாதிக்கப்பட்டன.

நீர்நிலைகள் உடைந்தன. விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். பின், அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

அப்போது, வெள்ள பாதிப்பு சேதங்கள், மீட்பு நடவடிக்கைகள், நிவாரணப்பொருட்கள் வழங்கிய விவரங்கள் வீடியோ பதிவுகளாக தொகுக்கப்பட்டு, மத்திய குழுவினர் பார்வைக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

ஆய்வு கூட்டத்தில், சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ககன்திப்சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் அமுதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us