sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஸ்டம்ஸ் சாலை சேதம்: சீரமைக்க கோரிக்கை

/

கஸ்டம்ஸ் சாலை சேதம்: சீரமைக்க கோரிக்கை

கஸ்டம்ஸ் சாலை சேதம்: சீரமைக்க கோரிக்கை

கஸ்டம்ஸ் சாலை சேதம்: சீரமைக்க கோரிக்கை


ADDED : மே 26, 2025 12:59 AM

Google News

ADDED : மே 26, 2025 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் சேதமான கஸ்டம்ஸ் சாலையை சீரமைக்காததால் விபத்து அபாயம் உள்ளது.

கடலுாரில் இருந்து நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் வரை பெண்ணையாற்றின் கரையோரம் கஸ்டம்ஸ் சாலை உள்ளது. இந்த சாலை கண்டரக்கோட்டையில் உள்ள விக்கிரவாண்டி- தஞ்சாவூர் சாலையை இணைக்கும் வகையில் முடிவு செய்து பணியை துவக்கினர்.

ஆனால் அரசியல்வாதிகளின் குறுக்கீடு காரணமாக கடலுாரில் துவங்கி மேல்பட்டாம்பாக்கம் வரை மட்டுமே பணிகள் முடிந்தது. சாலை பணிகள் முழுதும் முடிந்திருந்தால் கடலுார் வழியாக சென்னை வரை செல்லும் வாகனங்கள் போக்குவரத்து இடையூறு இல்லாமல் செல்ல முடியும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆற்றில் வெள்ளம் வந்த போது பல இடங்களில் கரைகள் உடைந்து சேதமானது. குறிப்பாக, மேல்பட்டாம்பாக்கம் அருகே கஸ்டம்ஸ் சாலை பாதியளவு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

அதை மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக சரி செய்தனர். அதேப் போன்று, விஸ்வநாதபுரம், வெள்ளப்பாக்கம் உட்பட பல இடங்களில் கரை உடைந்தததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

தற்போது சாத்தனூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் அதிகளவு தண்ணீர் வர வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கஸ்டம்ஸ் சாலை ஓரங்களில் பெண்ணையாற்றின் கரையை கான்கிரீட் சுவர் அமைத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us