sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகாளய அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

/

மகாளய அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்


ADDED : அக் 03, 2024 03:00 AM

Google News

ADDED : அக் 03, 2024 03:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : மகாளய அமாவாசையை முன்னிட்டு, கடலுார் சில்வர் பீச் மற்றும் விருத்தாசலம் பகுதியில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரளானவர்கள் கூடினர்.

புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசையில், நீர்நிலைகளில் நீராடி அந்தணர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். நேற்று மகாளய அமாவாசை என்பதால் கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஏராளமானோர் குவிந்தனர்.

கடலில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு அர்ச்சகர்கள் மூலம் தர்ப்பணம் கொடுத்தனர். அதேபோன்று, விருத்தாசலம் மணிமுக்தாற்றில் அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிப்பட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் சிவப்பிரியை குளக்கரையில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.






      Dinamalar
      Follow us