/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருமகள் இறந்த துக்கம்: மாமியார் தற்கொலை?
/
மருமகள் இறந்த துக்கம்: மாமியார் தற்கொலை?
ADDED : அக் 28, 2024 04:58 AM
கடலுார் : கடலுார் முதுநகர் அருகே மருமகள் இறந்த துக்கத்தில் மாமியார் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார், வண்டிப்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் குமார், 52. இவரது மனைவி புனிதவதி,42. இவர்களின் மகன் அருண்குமாரின் மனைவி ஜெர்சினி. கடந்த ஆக., 9ம் தேதி, துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் புனிதவதி, அதே வீட்டில் துாக்குபோட்டு கொண்டார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். மருமகள் இறந்த துக்கம் காரணமாக மனஉளைச்சலில் இருந்த புனிதவதி துாக்குபோட்டுக் கொண்டதாக அவரது குடும்பத்தினர் புகாரில் தெரிவித்துள்ளனர்.