ADDED : நவ 05, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார் கோவில் அருகே இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணந்தபுரம் கல்லடிக்குட்டையைச் சேர்ந்தவர் திலகர். இவரது 21 வயது மகள் பழஞ்சநல்லுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து திலகர் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.