ADDED : ஏப் 29, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்:
மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி மகள் கிருத்திகா, 23. உளுந்துார்பேட்டை தனியார் கல்லுாரியில் எம்.ஏ., இறுதியாண்டு மாணவி. கடந்த 26ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து திருமூர்த்தி அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

