/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் நுகர்வோர் குறைதீர்ப்பு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
/
மின் நுகர்வோர் குறைதீர்ப்பு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
மின் நுகர்வோர் குறைதீர்ப்பு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
மின் நுகர்வோர் குறைதீர்ப்பு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
ADDED : ஆக 01, 2025 02:37 AM
கடலுார்: மின் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்தின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலுார் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் ஜெயந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின், கடலுார் மாவட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்திற்கு நிதி/சட்டம் சார்ந்த தொழிலில் உள்ள உறுப்பினர் தேர்வு செய்யப்பட விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
இது தொடர்பாக சில விண்ணப்பங்களே பெறப்பட்ட நிலையில், மேலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்வு செய் யப்படும் நபர், மன்றத்திற்கு உறுப்பினராக தேர்வு செய்யப்படும் நாள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு உறுப் பினராக செயல்படுவார்.
இதற்காக நிதி/சட்டம் சார்ந்த தொழிலில் 15 ஆண்டிலிருந்து 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற மற்றும் உறுப்பினரின் மூன்றாண்டு பதவி காலம் முடிவடையும் நிலையில் 62 வயது பூர்த்தியடை யாமல் இருக்க வேண்டும்.
தகுதியானவர்கள் வரும் 15ம் தேதிக்குள் மேற்பார்வை பொறியாளர், கடலுார் மின்பகிர்மான வட்டம், கேப்பர்மலை, கடலுார் -607004 அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.