sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவிக்கு கொலை மிரட்டல்; கணவன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு

/

மனைவிக்கு கொலை மிரட்டல்; கணவன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு

மனைவிக்கு கொலை மிரட்டல்; கணவன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு

மனைவிக்கு கொலை மிரட்டல்; கணவன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 12, 2024 06:33 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்த கணவன் உள்ளிட்ட 3பேர் மீது பண்ருட்டி மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த தெற்கு சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகள் வினோலியா,21; டாக்டர் ; இவரும் இதே பகுதியை சேர்ந்த முந்திரி வியாபாரி சுபாஷ்சந்திரபோஸ்,27; காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. வினோலியா தனது பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார். வினோலியா தனது கணவர் சுபாஷ்சந்திரபோஸ் வீட்டில் குடும்பம் நடத்த அழைத்து செல்ல வற்புறுத்தி வந்தார்.

இதற்கு சுபாஷ்சந்திரபோஸின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 9ம் தேதி சுபாஷ்சந்திரபோஸ் வீட்டிற்குச் சென்ற வினோலியாவை அவரது கணவர் மற்றும் பெற்றோர்கள் அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

வினோலியா புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது பெற்றோர்கள் கிருஷ்ணமூர்த்தி, செல்வி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us