நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மங்கலம்பேட்டை: தமிழகத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூறிய தமிழக முதல்வவரை கண்டிதத்து, மங்லம்பேட்டையில், விஸ்வகர்மா சமுதாயத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயராமன் தலைமை தாங்கினார். மாணிக்க முருகன், விஜய், வீரபத்ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஸ்வகர்மா இளைஞர் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில தலைவர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
இதில், கண்ணன், வெங்கடேசன், முருகன், ஏழுமலை, பழனி, முருகானந்தம், சந்துரு, ஜீவா உட்பட பலர் பங்கேற்றனர். இதில், தமிழக முதல்வரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கணேசன் நன்றி கூறினார்.