ADDED : ஆக 28, 2026 08:44 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த டி.வி.புத்துார் கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கோரி, இந்திய ஐக்கிய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கடந்தாண்டு 129 பயனாளிகளுக்கு மனைப்பட்டா கோரி மனு கொடுக்கப்பட்டபோது, முதற்கட்டமாக 50 பேருக்கு தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இலவச மனைப்பட்டாவை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. தொடர்ந்து, தாசில்தார் முருகனிடம் மனு கொடுத்தனர். நிர்வாகிகள் பராசக்தி, தேன்மொழி, உஷாராணி, அஞ்சலை, தமிழ்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.
