ADDED : டிச 21, 2025 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் இ- பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக, குமாஸ்தாக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இ- பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பெரும்பாலான வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடலுாரில்கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக, வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்கத்தினர், இ- பைலிங் முறையை ரத்து செய்யக்கோரிநேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமாஸ் தாக்கள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

