
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடி பஸ் நிலையம் அருகில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில துணை செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். கட்சி தலைவர் பேரின்பம் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் பாண்டுரங்கன் வரவேற்றார்.
பஞ்சமி நில மீட்பு மாநிலத் துணைச் செயலாளர் பெரியசாமி, மங்களூர் ஒன்றிய தலைவர் ராமலிங்கம், மகளிரணி தலைவர் பரிமளா, துணை தலைவர் சந்திரா, செயலாளர் செல்லம்மாள், பொருளாளர் மலர்கொடி உட்பட பலர் பங்கேற்றனர்.
திட்டக்குடி அடுத்த பெருமுளை காலனி மக்களுக்கு கிடப்பில் போடப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மகளிரணி துணை செயலாளர் செல்வி நன்றி கூறினார்.

