ADDED : பிப் 10, 2026 03:36 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரையில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மணிதேவன் தலைமை தாங்கினார். மாநில சிறப்பு தலைவர் சீனிவாசன், மாநில ஒருங்கிணைப்பாளர் பரமசி வம், பிரசார செயலாளர் ஞானஜோதி பேசினர். நிர்வாகிகள் சபாபதி, முருகேசன், வசந்தி, சுமதி, கலாநிதி, கணபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு 6,750 ரூபாய் அகவிலைப்படி, பணிபுரியும் ஊழியர்களுக்கு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் நிலையில் பணி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷ மிட்டனர்.
