ADDED : ஆக 27, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடலுார் மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தினமும் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், 4 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர்கள் 4 பேரும், டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், தற்போது ஒரு பெண் உட்பட 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
