sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மைதானம் இருந்தும் பயனில்லை கடலுார் கல்லுாரி மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் தவிப்பு

/

மைதானம் இருந்தும் பயனில்லை கடலுார் கல்லுாரி மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் தவிப்பு

மைதானம் இருந்தும் பயனில்லை கடலுார் கல்லுாரி மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் தவிப்பு

மைதானம் இருந்தும் பயனில்லை கடலுார் கல்லுாரி மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் தவிப்பு


ADDED : நவ 21, 2024 06:10 AM

Google News

ADDED : நவ 21, 2024 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினத்தில், கடந்த 1964ம் ஆண்டு துவக்கப்பட்ட அரசு கலைக்கல்லுாரி உள்ளது. இருபாலர் படிக்கும் இங்கு, 17 இளங்கலை மற்றும் 11 முதுகலை பாடப்பிரிவுகள் உள்ளது. கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

இக்கல்லுாரி மாணவர்கள், 2017ம் ஆண்டு முதல், இதுவரையில் 153 பேர் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

நடப்பாண்டில் உஸ்பெஸ்கிஸ்தானில் நடந்த சர்வதேச அளவிலான பென்காக் சிலாட் போட்டியில் 3 வெண்கல பதக்கம், கடந்த ஆண்டு அகில இந்திய பல்கலைக்கழக அளவில் 5 வெள்ளி பதக்கம், 2022ல், 2 வெண்கல பதக்கம் வென்றனர். இதேபோன்று, டேக்வாண்டோ, மல்யுத்தம் உள்ளிட்ட பல்வேறு போட்டியில் சாம்பியன்ஷிப் பெற்றுள்ளனர்.

வாலிபால் போட்டியில், 2022ல் பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையேயான கடலுார் மண்டல அளவிலான போட்டியில் இரண்டாமிடமும், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை கபடி போட்டியில் முதலாம் இடமும் பெற்றனர்.

ஆனால், கபடி, கிரிக்கெட், வாலிபால், கோ கோ போன்ற வெளி விளையாட்டுகளில் இம்மாணவர்களால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சாதிக்க முடியவில்லை. இக்கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் கிராம சூழ்நிலைகளில் இருந்து வருகின்றனர்.

இவர்கள் கபடி மற்றும் வாலிபால், கோ கோ போட்டிகளில் ஆர்வமாக உள்ளனர். ஆனால், போதிய கட்டமைப்பு வசதியில்லாதது மாணவர்களின் வெற்றிக்கு தடையாக உள்ளது.

இக்கல்லுாரி எதிரில் பல ஏக்கர் பரப்பளவில் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. ஆனால், ஒவ்வொரு விளையாட்டிற்கென ஆடுகளம் இல்லை. பள்ளம், மேடாக உள்ள புல் தரையில் மாணவர்கள் கம்பங்கள் நட்டு வாலிபால் மற்றும் கபடி, கிரிக்கெட், கோ கோ விளையாடுகின்றனர். இதனால், புல் தரையில் வழுக்கி விழுவதால் மாணவர்கள் முறையான பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது. மைதானம் விஸ்தாரமாக இருந்தும் தடகள ஓடுபாதை இல்லை.

கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை பெறும்போது, விளையாட்டிற்கு கட்டணம் பெறப்படுகிறது. இதன் மூலம், பல்கலைக்கழக போட்டிகளுக்கான பயணச் செலவு, சீருடை, ஆண்டு விளையாட்டு விழா, விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்படுகிறது. விளையாட்டு மைதானத்திற்கான கட்டமைப்பு வசதிகள் இந்த நிதியில் இருந்து மேற்கொள்ள முடியவில்லை.

இதனால், வாலிபால், கபடி, கிரிக்கெட், கோ கோ விளையாட்டில் பயிற்சி பெறும் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இக்கல்லுாரி விளையாட்டு மைதானத்தை முறையாக சீரமைத்து, தடகள ஓடுபாதை, வாலிபால் கோர்ட், கபடி, கோ கோ, கிரிக்கெட் வலை பயிற்சி உள்ளிட்ட அந்தந்த விளையாட்டுகளுக்கு என தனித்தனி ஆடுகளம் நிரந்தரமாக ஏற்படுத்திக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us