/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கனகசபையில் பக்தர்கள் தரிசனம்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு
/
கனகசபையில் பக்தர்கள் தரிசனம்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு
கனகசபையில் பக்தர்கள் தரிசனம்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு
கனகசபையில் பக்தர்கள் தரிசனம்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு
ADDED : ஜன 12, 2025 04:59 AM

சிதம்பரம் :   சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா கடந்த 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இன்று தேரோட்டம் நடக்கிறது.
நேற்று முதல் 14ம் தேதி வரை 4 நாட்களுக்கு, கனகசபையில் பக்தர்களை அனுமதிப்பதால் இடையூறு ஏற்படும் என, தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கனகசபையில் பக்தர்களை அனுமதிக்க கோரி, தெய்வீக பக்தர்கள் பேரவை தலைவர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் மற்றும் காவல் துறைக்கு கடிதம் கொடுத்திருந்தார்.
அதே சமயத்தில், கோவில் தீட்சிதர்கள் தரப்பில், பூஜை முறைகள், பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு காரணத்தால், 11 முதல் 14ம் தேதி வரை கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதி அளிப்பதில் பல்வேறு சிரமம் ஏற்படும் எனவும், விழாவிற்கு பாதுகாப்பு கேட்டும் காவல் துறைக்கு கடிதம் கொடுத்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி கனகசபையில் ஏறி சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என, நேற்று காலை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, தெய்வீக பக்தர்கள் பேரவையினர் அறிவித்தனர்.
அதையடுத்து நேற்று காலை 50க்கும் மேற்பட்ட போலீசார் கோவிலுக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி நேற்று காலை முதல் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்தனர். தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். போராட்டம் அறிவித்த பக்தர்கள் பேரவையினரும் கனகசபை மீதேறி சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

