/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பம் அரசு பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
நெல்லிக்குப்பம் அரசு பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
நெல்லிக்குப்பம் அரசு பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
நெல்லிக்குப்பம் அரசு பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : நவ 09, 2025 06:12 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவ மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, பாடம் சார்ந்த அறிவு, நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட பல் வேறு தகவல்களை எளிதில் புரியும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
முன்னாள் தலைமை யாசிரியர் மறைந்த ரோஸ்கண்ணன் நினைவு அறக்கட்டளை சார்பில் அவரது மகன்கள் ஆசிரியர் ரவிசங்கர், தொழிலதிபர் உதயசங்கர் ஆகியோர் நெல்லிக்குப்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு 'தினமலர் - பட்டம்' இதழை வழங்கினர்.
தலைமையாசிரியர் பூங்கொடி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம் உடனிருந்தனர்.

