sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் அள்ளிய லாரி சிறை பிடிப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் விடுவிப்பு

/

மணல் அள்ளிய லாரி சிறை பிடிப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் விடுவிப்பு

மணல் அள்ளிய லாரி சிறை பிடிப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் விடுவிப்பு

மணல் அள்ளிய லாரி சிறை பிடிப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் விடுவிப்பு


ADDED : ஆக 23, 2011 11:40 PM

Google News

ADDED : ஆக 23, 2011 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே மணல் குவாரியில் இருந்து மணல் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறை பிடித்தனர்.

பண்ருட்டி அடுத்த பெரியஎலந்தம்பட்டு ஊராட்சி கெடிலம் ஆற்றங்கரையில் கடந்த மாதம் முதல் மணல் குவாரி இயங்கி வருகிறது. குவாரியில் இருந்து மணல் சலிக்கப்பட்டு சென்னை மெட்ரோ பிரிவிற்கு அனுப்பப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் குவாரியில் இருந்து சலிக்கப்பட்ட மணலுடன் லாரி ஒன்று எலந்தம்பட்டு காலனி வழியாக வந்தது. அப்போது காலனி பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதனால் மணல் குவாரியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி லாரியை சிறை பிடித்தனர். தகவலறிந்த காடாம்புலியூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் பூபாலச்சந்திரன், வி.ஏ.ஒ., குணசேகர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்குப் பின் நள்ளிரவு ஒரு மணியளவில் லாரியில் இருந்த மணலை மீண்டும் ஆற்றில் கொட்டி விட்டு லாரியை மட்டும் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us