ADDED : ஆக 23, 2011 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர் : தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்
இறந்தார்.கடலூர் அடுத்த பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் தங்கமணி, 38.
குடிப்பழக்கமுடைய இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. 19ம் தேதி மீண்டும்
வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த தங்கமணி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ
வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவர் கடலூர் அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து
விசாரித்து வருகின்றனர்.