/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செயின்ட் பால் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி
/
செயின்ட் பால் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி
செயின்ட் பால் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி
செயின்ட் பால் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி
ADDED : டிச 22, 2024 09:31 AM

பண்ருட்டி : பண்ருட்டிஅடுத்த பனிக்கன்குப்பம் செயின்ட்பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில்'தினமலர் பட்டம்' இதழின் வினாடி வினா போட்டி நடந்தது.
புதுச்சேரி 'தினமலர் பட்டம்'இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில்சொல் பரிசு வெல்' மெகா வினாடி வினா போட்டியின், பள்ளி அளவிலான போட்டி பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கிருபாகரன் தலைமை தாங்கினார். போட்டியில் 6 ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும்300 மாணவர்கள் பங்குபெற்றனர்.
முதல்நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகினர். இதில் 8 அணிகளாக பிரித்து இறுதி சுற்று போட்டி நடந்தது.
7 ம் வகுப்பு மாணவி கார்த்திகாதேவி, 8 ம் வகுப்பு மாணவர் தருண்பிரேம் அணியினர் முதலிடம் பிடித்தனர். 9ம் வகுப்பு மாணவி வசந்தகுமாரி, 7 ம் வகுப்பு மாணவன் பீஜிமேனன் அணியினர் 2 ம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற இருஅணிகளுக்கும் பதக்கம் மற்றும் பரிசுகளைபள்ளி தாளாளர் கிருபாகரன், பள்ளி முதல்வர் விஜயா ஆகியோர் வழங்கினர். இதில் பட்டம் போட்டி ஒருங்கிணைப்பாளர் சரண்யா, உடற்கல்வி ஆசிரியர் ஆதிவெங்கடேசசீனுவாசன் உடனிருந்தனர். வெற்றி பெற்று முதல் இரு இடங்களை பிடித்த அணியினர் மெகா வினாடி வினா போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.