sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பயனாளிகளுக்கு மானிய ஆணை குறைகேட்பு கூட்டத்தில் வழங்கல்

/

பயனாளிகளுக்கு மானிய ஆணை குறைகேட்பு கூட்டத்தில் வழங்கல்

பயனாளிகளுக்கு மானிய ஆணை குறைகேட்பு கூட்டத்தில் வழங்கல்

பயனாளிகளுக்கு மானிய ஆணை குறைகேட்பு கூட்டத்தில் வழங்கல்


ADDED : நவ 05, 2024 06:07 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் நாள் கூட்டத்தில், 15 பயனாளிகளுக்கு 9.3 லட்சம் ரூபாய் மதிப்பில் மானியத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்திற்கு, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 462 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் 15 பயனாளிகளுக்கு 9.3௦ லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மானியத்திற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.

டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, மாவட்ட தாட்கோ மேலாளர் லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us