sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே பயன்தரும்: எஸ்.பி., ராஜாராம்

/

ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே பயன்தரும்: எஸ்.பி., ராஜாராம்

ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே பயன்தரும்: எஸ்.பி., ராஜாராம்

ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே பயன்தரும்: எஸ்.பி., ராஜாராம்


ADDED : பிப் 17, 2024 11:58 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே பயன்தரும் என, எஸ்.பி., ராஜாராம் அறிவுரை வழங்கினார்.

நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. நகராட்சி சேர்மன் ஜெயந்தி தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர் கிரிஜா முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை வசந்தி வரவேற்றார். எஸ்.பி., ராஜாராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், கல்வி மட்டுமே முன்னேற்றம் தரும். நான் உங்கள் முன் நிற்பதற்கு நான் கற்ற கல்வியே காரணம். பெண் கல்வி அவசியம். கல்வியே தன்னம்பிக்கையை தரும்.

ஒழுக்கமில்லாத கல்வி பயன்தராது, படித்தவர்களுக்கு கிடைக்கும் மரியாதை யாருக்கும் கிடைக்காது. தாயும், தந்தையுமாக போற்ற வேண்டியவர்கள் ஆசிரியர்கள். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே பயன்தரும் என, பேசினார்.

விழாவில் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன், வழக்கறிஞர் உதயகுமார், வட்டார கல்வி அலுவலர் புவனேஸ்வரி, கவுன்சிலர்கள் ஸ்ரீதர், பூபாலன், பாரூக்உசேன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதிகள் வேலு, கதிரேசன், இளைஞரணி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us