sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூட்டுறவுத்துறை செயல்பாடு குறித்து பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடல்

/

கூட்டுறவுத்துறை செயல்பாடு குறித்து பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடல்

கூட்டுறவுத்துறை செயல்பாடு குறித்து பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடல்

கூட்டுறவுத்துறை செயல்பாடு குறித்து பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடல்


ADDED : ஏப் 19, 2025 06:34 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், வணிகவியல் துறை மாணவ, மாணவிகளுடன் கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூடுதல் பதிவாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, கூட்டுறவுத்துறையின செயல்பாடுகள் குறித்து வணிகவியல் துறை மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

கடலுார் மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் வணிகவியல் துறைத்தலைவர் பத்மநாபன், பேராசிரியர் ராமு பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் வணிகவியல் துறை மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சிதம்பரம் சரக துணைப்பதிவாளர் ரங்கநாதன், கூட்டுறவு சார்பதிவாளர்கள், சங்கப்பணியாளர்கள் பங்கேற்றனர். மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.

கடலுார் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் எம்.ஜி.ஆர்.,கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கடலுார் மண்டல இணைப்பதிவாளர், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, கல்வி நிதியாக ஒருகோடியே 3லட்ச ரூபாய்க்கான காசோலையை சென்னை கூடுதல் பதிவாளரிடம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us