/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இறுதி ஊர்வலத்தில் தகராறு: 2 பேர் கைது
/
இறுதி ஊர்வலத்தில் தகராறு: 2 பேர் கைது
ADDED : பிப் 09, 2026 03:23 AM
கடலுார்: இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கிய நான்கு பேர் மீது புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சுபாஷ், 27; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் காலை அதே பகுதியைச் சேர்ந்த அய்யாக் கண்ணு என்பவரின் இறுதி ஊர்வலத்தில், சுபாஷ் கலந்துகொண்டார். அப்போது முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி மகன் அஜித்குமார், சக்திவேல் மகன் தினேஷ்குமார், தனபால் மகன் சரவணன், செந்தில்குமார் மகன் சஞ்சய் ஆகியோர் சேர்ந்து, சுபாஷ் மற்றும் அவரது நண்பர் விக்னேஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் சுபாஷ், விக்னேஷ் காயமடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து தினேஷ்குமார், சஞ்சய் ஆகியோரை கைது செய்து மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

